தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமாடிய அஞ்சலி, அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். அப்படம் கிடப்பில் கிடக்கிறது. பின்னர் சில தெலுங்கு படங்களில் நடித்து விட்டு மீண்டும் தமிழுக்கு வருவதாக அறிவித்தார். அதையடுத்து, சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்க அவரிடம் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தனர்..
இந்த செய்தி கசிந்ததையடுத்து, எனது ஊர் சுற்றி புராணம் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்து விட்டு எஸ்கேப்பான அஞ்சலியை என் படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் மற்ற படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று டைரக்டர் மு.களஞ்சியம் கொடி பிடித்தார். இதனால் சில வாரங்களாக பெரிய சர்ச்சை நிலவியது.
விளைவு, அஞ்சலியை ஜெயம்ரவியுடன் நடிக்க வைக்க பேசிக்கொண்டிருந்தவர்கள் குழம்பினர். பிரச்சினைக்குரிய நடிகையை புக் பண்ணி விட்டு பின்னர் நமது படத்தையும் அவர் பாதியில் விட்டுச்சென்றால் சிக்கிக்கொள்வோமே என்று தடுமாறினர். இதனால் அவருக்கு கொடுத்திருந்த அட்வான்சைகூட திரும்பப் பெற்றனர்.
ஆனால், இப்போது மீண்டும் அவர்களை சந்தித்து, களஞ்சியத்துக்கும் தனக்குமுள்ள பிரச்சினையை பற்றி விவரமாக சொல்லியிருக்கிறாராம் அஞ்சலி. அதையடுத்து அதுவரை அஞ்சலி மீது நம்பிக்கையில்லாமல் இருந்த அவர்களுக்கு இப்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். அதனால், வாங்கிய அட்வான்சை மீண்டும் கொடுத்துள்ளார்களாம். ஆக, ஜெயம்ரவியுடன் நடிக்க சைன் பண்ணி விட்டாராம் அஞ்சலி.