ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி எடக்கு என்ற புதிய படத்தில் நடிப்பதாக பத்திரிகை விளம்பரங்களும், செய்திகளும் வெளியிடப்பட்டது. ஆனால் இது அவர் 7 வருடங்களுக்கு முன்பு நடித்த கன்னட படத்தின் டப்பிங் வெர்சனாம். அதை மறைத்து புதுப்படம் போலவும், அவர்தான் ஹீரோ என்பது போலவும் பில்டப் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து விஜய்சேதுபதி கூறியிருப்பதாவது: நான் 7 வருடங்களுக்கு முன்பு அக்காடா என்ற கன்னடப்படத்தில் நடித்தேன். அதில் நான் ஹீரோ அல்ல. நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பேன். அந்த படத்தை ரீமேக் செய்து வெளியிடுவதாக அறிகிறேன். அது அவர்களின் உரிமை அதில் நான் தலையிட மாட்டேன். ஆனால் அந்தப் படத்தில் நான்தான் ஹீரோ என்பது போன்று விளம்பரம் செய்து ரசிகர்களை ஏமாற்றலாமா?. இதை சம்பந்தப்பட்டவர்கள் யோசித்து பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.