ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், புதியவர் அனீஸ் இயக்கத்தில், ஜெய்-நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம் எனும் நிக்காஹ். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் இப்பட ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, திருமணம் எனும் நிக்காஹ் எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுதவோ எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும்.
கணவன் மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும், நண்பர்கள் இடையே ஆகட்டும், நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும், நம்மிடம் பணிபுரிகிறவர்கள் இடையே ஆகட்டும், எல்லோரிடமும் நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த புரிதல் அவசியம்.
திருமணம் எனும் நிக்காஹ் மதங்கள் இடையே கூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும்.இந்த படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டது. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ அதற்கு பிறகோ திருமணம் எனும் நிக்காஹ் வெளியாகும் என்று கூறினார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.