'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகாசிங், மீண்டும் அதே சேதுவுக்கு ஜோடியாக வாலிபராஜா படத்தில் நடித்துள்ளார். அதோடு, லட்டு படத்தில் விசாகாசிங்கிற்கு காதல் தூது விட்ட சந்தானம், இந்த படத்தில் காதலில் தோல்வியடைந்து நிஜமாலுமே சேதுவாகி விடும் சேதுவுக்கு லவ் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மனநல மருத்துவராக நடித்துள்ளார்.
இந்த படம் உனக்கு தமிழில் பெரிய இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று சந்தானம் உள்ளிட்டோர் விசாகாவிடம் பில்டப் கொடுத்தபோதும், அவர் எதையும் நம்பவில்லை. அதனால், மலையாளம், தெலுங்கு என்ற ஓரிரு படங்களை கைப்பற்றி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சினிமாவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என்று சொல்லி வரும் விசாகாவின் தியாக உள்ளத்தை பரிசோதிக்கும் விதமாக தெலுங்கில் அவர் நடித்து வரும் ரவுடி பெல்லோ என்ற படத்தில் அவரை ஒரு காட்சியில் புகை பிடிப்பது போல் நடிக்க வைத்துள்ளார்களாம்.
பள்ளிக்கூட பருவத்தில் மட்டுமே அப்பா பிடித்து விட்டு வைத்திருக்கும் சிகரெட்டை எடுத்து ஓரிரு உறி உறிஞ்ச பழக்கம் மட்டுமே உள்ள விசாகாவிற்கு இப்போது முழு சிகரெட்டையும் பிடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும் பெரிய விஷப்பரீட்சையாகி விட்டதாம். இருப்பினும், சிகரெட் பிடிப்பதில் மன்னர்களே, தான் பிடிக்கும் ஸ்டைலைப்பார்த்து அசர வேண்டும் என்பதற்காக, சில இளவட்ட பசங்களை உடன் வைத்துக்கொண்டு சிகரெட் பிடிக்க பயிற்சி எடுத்த விசாகாசிங், அந்த காட்சியில் ஸ்டைலாக இரண்டு விரலுக்கு நடுவே சிகரெட்டை வைத்தபடி புகை மண்டலத்தை ஊதி தள்ளினாராம். அப்படி அவர் நடித்த காட்சி சில டேக்குகளிலேயே ஓ.கே வாகி விட்டதாம்.
இப்படி சொல்லும் விசாகாசிங்கிடம், ஒருவேளை மது குடிக்கிற சீனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு, சிகரெட் என்றால் நிஜ சிகரெட்டை பிடித்துதான் ஆக வேண்டும். ஆனால் மது என்கிறபோது பிளாக் டீயைகூட கிளாசில் ஊற்றி குடிக்கலாமே.அது ஒன்றும் பெரிய விசயமில்லையே என்று கேசுவலாக சொல்கிறார் விசாகாசிங்.