ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பின், மீடியாக்களுக்கும், தனக்குமிடையே தடுப்புச் சுவர் எழுப்பி வைத்துள்ளார் நயன்தாரா. தான் நடிக்கும் படங்களின் 'பிரஸ்மீட்'களில் கூட, அவர் பங்கேற்பதில்லை. இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சிலர், நயன்தாராவைப் பற்றி தவறான செய்திகளை பரப்பிவிட்டு, தங்களின் படங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றனராம். சமீபத்தில் கூட, அவர் நடித்துவரும், ஒரு படத்தின் வில்லன் நடிகருடன், காதலில் விழுத்திருப்பதாக நயன்தாராவை பற்றி, வதந்தி பரப்பி விட்டுள்ளார்களாம். இதனால் ஆவேசமடைந்துள்ள நயன்தாரா, 'உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பிவிட்டு, மலிவான விளம்பரம் தேட முயற்சிக்க வேண்டாம். இனிமேல் என்னைப்பற்றி, யாராவது தவறான செய்தி பரப்பினால், அவர்கள் மீது சட்டப்படிநடவடிக்கை எடுப்பேன் என, எச்சரித்துள்ளாராம்.