ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பாய்ஸ், அள்ளிதந்த வானம், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் பாலமுரளி மோகன். வெள்ளித்திரை சினிமா மட்டுமன்றி சின்னத்திரை மற்றும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். 54 வயதான பாலமுரளி மோகன், சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில், மனைவி சுமதியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சுமதி உறவினர் வீட்டு விசேஷத்திற்காக நேற்று இரவு வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த சுமதி, கதவை தட்டியுள்ளார், ஆனால் வெகுநேரம் ஆகியும் பால முரளி மோகன் கதவை திறக்கவில்லை, பின்னர் ஜன்னல் வழியாக சுமதி பார்த்த போது, பால முரளி மோகன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலமுரளி மோகனுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் அமெரிக்காவில் வேலை பார்கிறார்.