ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஐபிஎல் ஆட்டத்தின் போது தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டியிருந்தார். இரண்டு வாரங்களாக மீடியாக்களில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே அமெரிக்காவில் இருந்த ப்ரீத்தி ஜிந்தா விசாரணைக்காக சில நாட்களுக்கு முன் மும்பைக்கு வந்தார். விசாரணையின் போது காவல்துறையினரிடம் நெஸ் வாடியா தன்னிடம் மூன்று தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
இது பற்றி தெரிவித்த காவல் துறை அதிகாரி, “மும்பை மைதானத்தில் கர்வாரே பெவிலியன் பாக்ஸ் அறையில் பஞ்சாப் அணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் குறித்து நெஸ் வாடியா சண்டை போட்டிருக்கிறார். அப்போது பஞ்சாப் அணி நன்றாக ஆடிக் கொண்டிருந்ததால் அவரை அமைதியாக இருக்கும்படி ப்ரீத்தி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் கோபமுற்ற நெஸ் வாடியா ப்ரீத்தியை கண்டபடி பேசி, கையைப் பிடித்தும் தள்ளியிருக்கிறார். பின்னர் ப்ரீத்தி அங்கிருந்து வெளியேறி வெளியில் உள்ள ஒரு சீட்டில் அமர்ந்திருக்கிறார். அங்கும் வந்து நெஸ் வாடியா சண்டையிட்டிருக்கிறார். அப்போது ப்ரீத்தியின் அமெரிக்க நண்பர் ஒருவர் நெஸ் வாடியாவிடம் சண்டைக்குப் போயிருக்கிறார். அதன்பின் நெஸ் வாடியா அங்கிருந்து போயிருக்கிறார்.
ஆட்டம் முடிந்ததும், மைதானத்திற்குச் சென்று வீரர்களைப் ப்ரீத்தி பாராட்டும் போதும் மூன்றாவது முறையாக தவறாக நடந்து கொள்ள முயன்றிருக்கிறார். அந்த சம்பவங்கள் நடந்த போது அங்கிருந்த 14 பேரை சாட்சியாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார் ப்ரீத்தி. அதில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு நெஸ்வாடியாவின் நண்பர்கள் சிலர் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார். ப்ரீத்தியை இது சம்பந்தமாக வேறு சில விசாரணைப் பிரிவினரும் சந்தித்து விசாரித்து வருகின்றனராம். பிரபல தாதாக்கள் நெஸ்வாடியாவின் செயலாளரை மிரட்டிய விவகாரத்தையெல்லாம் ப்ரீத்தியின் வழக்கறிஞர் மறுக்கிறார். அவர்களையெல்லாம் யாரென்றே ப்ரீத்திக்குத் தெரியாது என்கிறார்.
இன்னும் சில நாட்களில் இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.