ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு-நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தை தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் பாண்டிராஜ், அடுத்து ஜோதிகாவை வைத்து ஒரு சிறுவர்கள் படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மீண்டும் ஜோதிகா நடிப்பதற்கு சூர்யாதரப்பை சந்தித்து பேசி வந்தார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது பாண்டிராஜ் இயக்கும் சிறுவர் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறாராம்.
இரண்டு சிறுவர்களை மையமாகக்கொண்ட கதையில் உருவாகும் அப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சத்யன் நடிக்கிறாராம். அதோடு, கமர்சியலுக்காக சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் வந்து செல்கிறாராம். தற்போது இது நம்ம ஆளு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள பாண்டிராஜ், அதை முடித்ததும் இப்பட வேலைகளில் இறங்குகிறாராம்.
ஆனால், ஜோதிகாவை இந்த படத்தில் நடிக்க கேட்க சென்ற இடத்தில் அவரது கணவரையே தயாரிப்பாளராக்கி, ஒரு வேடத்திலும் நடிக்க வைத்து விட்டார் பாண்டிராஜ். ஆனால், இந்த படத்தில் ஜோதிகா நடிப்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இன்னும் டைட்டீல் வைக்கப்படாத இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.