ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இரண்டாவது படம் ஜிகர்தண்டா. சித்தார்த், லட்சுமிமேனன் நடிக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில்...'ஜிகர்தண்டா' தென்கொரியத்திரைப்படத்திலிருந்து திருடப்பட்ட கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜிகர்தண்டா படம் விரைவில் வெளியாகவிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2006 ஆம் ஆண்டு, யூ ஹா என்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளியாகி, பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம் 'ஏ டர்ட்டி கார்னிவல்'. இந்த திரைப்படத்தின் கதையை சுட்டுத்தான் 'ஜிகர்தண்டா' என்ற பெயரில் படமாக எடுத்திருக்கிறாராம் கார்த்திக் சுப்பாராஜ்.
'ஜிகர்தண்டா' படத்தின் கதை என்ன?
நகரத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான் மிகப்பெரிய தாதா ஒருவன். தாதாவின் முக்கிய அடியாட்களை போட்டுத்தள்ளிவிட்டு குறுக்குவழியில் தாதாவின் தளபதியாகிவிடுகிற ஹீரோ, நாளடைவில் அவனும் மிகப்பெரிய தாதாவாகிறான். அவனது பள்ளிக்கூடத்தோழன் ஒருவன் சினிமா டைரக்டராக முயற்சி செய்பவன். ரௌடிகளின் வாழ்க்கையை வைத்து தன்னுடைய முதல் படத்தை எடுக்க நினைத்து தன் பள்ளி நண்பனும், ரௌடியுமான ஹீரோவை அணுகுகிறான். அவனின் வாயாலேயே ரௌடியிஸத்தைப் பற்றிய உண்மைத்தகவல்களை பெறுகிறான்.
இதற்கிடையில் பள்ளிக் கூடத்தில் படித்தபோது சக மாணவி மீது ஹீரோவுக்கு மயக்கம் இருந்தது. அவளை ஹீரோவுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவள் மீதுள்ள காதலில் தங்களின் ரௌடியிஸம் குறித்த தகவல்களை ஒளிவுமறைவில்லாமல் சொல்கிறான். அந்த தகவல்களை வைத்து படம் இயக்குகிறாள் நண்பன். தன்னைப்பற்றிய ரகசியங்கள் அனைத்தும் படத்தில் எப்படி வந்தது? என்று வில்லன் விசாரிக்கிறான். அந்த புதுமுக இயக்குநரிடம் விசாரிக்கும்போது உண்மை தெரிகிறது. தன் விசுவாச தளபதியான ஹீரோதான் இத்தனைக்கும் காரணம் என்று...
அப்புறம்? 'ஏ டர்ட்டி கார்னிவல்' (A dirty carnival) தென் கொரியப் படத்தின் டிவிடி கிடைத்தால் வாங்கிப் பாருங்க பாஸ். கார்த்திக் சுப்பாராஜ் எப்பேற்பட்ட ஆளுன்னு புரியும்.