25 லட்சம் சம்பளம் கேட்டு பிடிவாதம் செய்யும் பசுபதி!
25 ஜூன், 2014 - 17:35 IST
வில்லனாக அறிமுகமான பசுபதி, குசேலன். வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். விளைவு, அந்த படங்கள் தோல்வியடைந்ததால், அவரது மார்க்கெட் கவிழ்ந்தது. அதனால், அதன்பிறகு வில்லன் வேடங்களும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர், மேடை நாடகங்களில் நடித்து தனது நேரத்தை போக்கி வந்தார் பசுபதி.
இந்தநிலையில், விஜயசேதுபதி நடித்த இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில் ஒரு அண்ணாச்சி வேடத்தில் நடித்திருந்தார். உட்கார்ந்து கொண்டே பஞ்சாயத்து பண்ணும் வேடம்தான். என்றாலும், காமெடித்தனமாக செய்து அதில் ஸ்கோர் பண்ணியிருந்தார் பசுபதி. அதயடுத்து, நயன்தாரா நடித்திருநத அனாமிகா படத்திலும் முக்கியமான போலீசாக நடித்தார். அவரது மிரட்டலான நடிப்பு மீண்டும் அவருக்குள் இருந்த வில்லனை வெளியே எடுத்து வந்திருந்தது.
மேலும், அந்த படங்களில் மீண்டும் அவரது நடிப்பு பேசப்பட்டதால், அதுவரைக்கும் சான்சு கிடைத்தால் போதும் என்று கிடைக்கிற சம்பளத்தை வாங்கி வந்தவர், திடீரென்று 25 லட்சமாக தன் சம்பளத்தை உயர்த்தினார். ஒரு வாரமோ, பத்து நாளோ, நான் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமென்றால், 25 லட்சம் தர வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி வந்தார்.
இதனால், பசுதியை நாடிச்சென்று கொண்டிருந்த பட்ஜெட் படாதிபதிகள் தற்போது பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அசரவில்லை பசுபதி. என் திறமைக்கேற்ற சம்பளம் தந்தால் மட்டுமே நடிப்பேன் என்று தனது நிலையில் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறார்.