மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்தி நடிகைகளைப்பொறுத்தவரை எதையாவது செய்து ரசிகர்களின் கவனம் தங்கள் மீது இருக்க வேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டுவார்கள். அந்த வகையில், பிரியங்கா சோப்ராவைப் பொறுத்தவரை, தான் நடித்த படங்கள் மட்டுமின்றி, அவ்வப்போது வித்தியாசமான கோணங்களில் தன்னை படம் பிடித்து அவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேத்திக்கொண்டே இருப்பார்.
இதனால் தான், பிரியங்கா சோப்ரா நடிக்க வந்து 10 ஆண்டுகளாகி விட்டபோதும் ரசிகர்களுக்கு அவர் மீதுள்ள மோகம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், தான் அவுட்டோர் படப்பிடிப்புகளில் இருந்தாலும் இதுபோன்ற வேலைகளை தொடர்ந்துவரும் பிரியங்கா சோப்ரா, இன்று தண்ணீருக்குள் மூழ்கியபடி, செக்சியாக போஸ் கொடுப்பது போன்று ஒரு அதிரடியான போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அவரது இணையதளத்துக்குள் தினமும் விசிட் அடிக்கும் ரசிகர்களுக்கு அந்த போட்டோ இன்ப அதிர்ச்சியை கொடுக்க லட்சக்கணக்கில் லைக் கொடுத்து வருகிறர்களாம். அதோடு அந்த புகைப்படத்தைப்பற்றிய தங்களது கருத்துக்கள், கவிதைகளையும் எழுதி தள்ளி வருகிறார்களாம். அதை அவுட்டோரில இருந்தபடியே கண்காணித்து வரும் பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது ரசிகர்களுக்கு தனதுதரப்பில் இருந்து நன்றி அறிவிப்புகளையும் வெளியிட்டுக்கொண்டேயிருக்கிறாராம்.