'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
2002-ம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டிச்சென்ற நடிகர் சல்மான்கான், மும்பையிலுள்ள பாந்த்ரா சாலையில் சென்றபோது, சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஓட்டினார். இதில் ஒருவர் ஸ்பாட்டிலேயே இறந்து விட்டதோடு, 14 பேர் பலத்த காயமடைந்தனர். இது சம்பந்தமான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், சாட்சியங்கள் சல்மான்கானுக்கு எதிராக இருந்ததால் அவர் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது. இதனால், அவரை வைத்து படம் தயாரித்துக்கொண்டிருப்பவர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.
ஆனால், இப்போது அந்த விபத்து நடத்த இடத்துக்கு அருகில் உள்ள நீல்சாகர் என்ற ஹோட்டலில் செக்யூரிட்டியாக வேலையில் இருந்த ஒருவர், சல்மான்கான் காரை ஓட்டிச்சென்று அவர்கள் மீது மோதியதாக நான் சொல்லவில்லை. கார் மோதிய சத்தம் கேட்டதாக மட்டும்தான் எனது முந்தைய வாக்குமூலத்தில் கூறியிருந்தேன் என்று பல்டி அடித்துள்ளார்.
இதன்காரணமாக, விபத்து நடந்தபோது சல்மான்கான் காரில் இருந்து இறங்கி வந்ததாகவும், அவர்தான் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்டி வந்தார் என்று கூறப்பட்ட போலீஸ் தர்பபு சாட்சியங்கள் அனைத்தும் செயலிழந்து போய் உள்ளன. இருப்பினும் அந்த செக்யூரிட்டியிடம் அதையடுத்து அரசுதரப்பு வழக்கறிஞர்கள் துருவி துருவி விசாரித்தபோது அவர் மேற்கொண்டு பேச மறுத்து விட்டார். இதனால் விசாரணையை ஒத்தி வைக்கபபட்டுள்ளது.
திடீரென்று முக்கிய சாட்சியம் பல்டி அடித்திருப்பதால், சல்மான்கான் தரப்புக்கு ஆறுதல் வெற்றியாக இது அமைந்திருக்கிறது. என்றாலும், போலீசார் மேலும் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஒருவேளை சாட்சியின் மனதை கலைத்து விட்டார்களோ என்ற கோணத்திலும் அவர்களது விசாரணை சென்று கொண்டிருக்கிறதாம்.