ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் மாளவிகா. என்ன சத்தம் இந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது அழகு மகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். முறைப்படி அனைத்து வகையான நடனத்தையும் கற்றிருப்பவர். மாளவிகாவுக்கு 2009ம் ஆண்டு நடந்த மிஸ்.கேரளா போட்டியில் அழகான கண்ணழகி பட்டம் கிடைத்தது. இந்த விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் வினித் சீனிவாசன் மாளவிகாவை மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தில் ஹீரோயின் ஆக்கினார்.
பிறகு கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தவர், இப்போது தமிழுக்கு வந்திருக்கிறார். என்ன சத்தம் இந்த நேரம் முதலில் வெளியாக இருந்தாலும் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட படம் அழகு மகன்தான். எற்கெனவே தமிழ் சினிமாவில் வாளமீனு மாளவிகா, அண்ணி மாளவிகா, மாளவிகா மேனன், மாளவிகா நாயர் என்று நிறைய மாளவிகாக்கள் இருப்பதால் அழகு மகன் இயக்குனர் பெயரை மாற்றத் சொன்னதற்கு மறுத்து விட்டாராம்.
இதுபற்றி மாளவிகா கூறியிருப்பதாவது: மாளவிகாங்றது எனக்கு அப்பா, அம்மா வைத்த அழகான பெயர். அதை ஏன் மாத்தணும். ஒவ்வொரு மாளவிகாவுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும்தானே. அந்த அடையாளத்தை வைத்து பிரித்து பார்த்துக் கொள்ளலாமே. வேண்டுமானால் அப்பா பெயரையும் சேர்த்து மாளவிகா வேல்ஸ் என வைத்துக் கொள்ளகிறேன் என்று சொல்லிவிட்டேன். அதை எல்லோரும் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். கிளாமராக இல்லாமல் நல்ல குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து ரேவதி சேச்சி மாதிரி வரணுங்றது என்னோட ஆசை என்கிறார் மாளவிகா வேல்ஸ்.