பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சென்னையில் உள்ள பிக்சல் கிராப்ட் ஸ்டூடியோ என்ற நிறுவனம் திரைபடங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்து கொடுத்து வருகிறது. இந்த நிறுவனம் மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளை நவீன தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி திரைப்படமாக தயாரிக்க இருக்கிறது.
அதாவது புளூமெட், அல்லது கிரீன்மெட் (கலர் ஸ்கிரீன்) பின்னணியில் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து காட்சிக்கான இடம், சூழ்நிலை, பொருட்களை கிராபிக்சில் உருவாக்கி இந்த படங்கள் தயாராகும். பார்ப்பதற்கு ஒரிஜினல் போன்றே இருக்கும். இப்போதும் படங்களில் இதனை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ரசிகர்களால் அதனை பிரித்து கண்டுபிடிக்க முடியாது.
இப்போது இந்த தொழில்நுட்பத்தில் சுஜாதா எழுதிய என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ கதைகளை படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். "விஞ்ஞான வளர்ச்சியால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன இந்த கதைகளை அந்த எதிர்காலம் வந்துவிட்ட பிறகு படமாக எடுக்கிறோம்" என்கிறார், பிக்செல் கிராப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும், இயக்குனருமான சித்தார்த்.
அவர் மேலும் கூறியதாவது: விர்சுவல் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இந்த கதைகளை படமாக உருவாக்குகிறோம். இந்த முறையில் திரைப்படம் எடுப்பது சுலபம். ஹாலிவுட்டில் வெளிவரும் பிரமாண்ட படங்கள் இந்த முறையில்தான் உருவாக்கப்படுகிறது. என் இனிய எந்திரா கதை 40 கோடி செலவில் திரைப்படமாக உருவாக்கப்பட இருக்கிறது. சென்னை மற்றும் லண்டனில் உள்ள செண்ட்ராய்டு மோசன் கேப்சர் (கோச்சடையானை உருவாக்கிய நிறுவனம்) ஸ்டூடியோவிலும் படமாக்க உள்ளோம். என்றார்.