பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுந்தர்.சி, தற்போது தினேஷ் கார்த்திக்கின் விஷன் ஐ குளோபல் மீடியாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்காக இயக்கும் படம் ''அரண்மனை''. இதில் ஹன்சிகா, ராய் லட்சுமி(லட்சுமி ராய்), ஆண்ட்ரியா, வினய், சந்தானம் நடிக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் காமெடி திகில் படம் இது.
இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்து இதே நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். அது கலகலப்பு பார்ட் 2. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சியின் இயக்கத்தில், வெளிவந்த கலகலப்பு பெரும் பெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திற்கான கதையும் சுந்தர்.சியிடம் தயாராக இருக்கிறது. இதனால் தனது அடுத்த படமாக கலகலப்பு பார்ட்-2 தயாராகிறது. கலகலப்பில், இரண்டு ஹீரோக்கள் நடித்திருந்தார்கள். பார்ட்-2வில் மூன்று ஹீரோக்கள் உண்டு. கட்டாயம் சந்தானம் நடிக்கிறார்.
அதற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஒரு படத்தையும், விஷன் ஐ குளோபல் மீடியாஸ் நிறுவனமே தயாரிக்கிறது. மேற்கண்ட தகவல்கள் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.