'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சின்னத்திரை வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படுகிறவர். வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, ஒரு கை ஓசை, மன்னன் மகள், என ஒரே நேரத்தில் 5 தொடர்களில் நடித்து வரும் ஒரே நடிகையும் மஹாதான். இத்தனை பிசியான ஷெட்யூலிலும் இது நல்லா இருக்கு என்ற ஒரு டெலிபிலிமிலும் நடித்து முடித்துள்ளார் மஹா.
இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமா வாய்ப்புகளைகூட தவிர்த்துவிடும் நான் இந்த டெலிபிலிமின் கதையை இயக்குனர் ரவிராஜா என்னிடம் சொன்னபோது உடனே நடிக்க வேண்டும்போல இருந்தது. ஒரு விதவை பெண் இந்த சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ எத்தனை போராட்டம் நடத்த வேண்டியது இருக்கிறது. எவ்வளவு அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை சொல்லும் கதை. பார்த்தால் ஒரு சொட்டு கண்ணீராவது விடாமல் இருக்க மாட்டார்கள். விதவைகள் மீது மரியாதையை ஏற்படுத்தும். நானும் அந்த கேரக்டரை அழுதபடியேதான் நடித்துக் கொடுத்தேன். ஒளிபரப்பாகும் நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் என்கிறார் மஹா.