தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் லகுட பாண்டியர்கள் என்ற படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகிறது. மகாதேவ், கிருஷ்ணா, அமர், தேஜா ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். அஞ்சனா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். கே.பாக்யராஜ், பாண்டியராஜன், சுமன், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சந்திரமகேஷ் இயக்குகிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: சென்னையில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் விளைவிக்க நான்கு தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவுகிறார்கள். சென்னையில் உள்ள ஒரு தலைமை வங்கியை கொள்ளையடிக்க நான்கு கொள்ளையர்கள் வருகிறார்கள். இந்த இரு குரூப்பையும் இங்குள்ள இளைஞர்களும், போலீசும் இணைந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே கதை. நான்கு மொழிகளில் தயாராவாதால் அந்ததந்த மொழிக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்துள்ளோம். குறிப்பாக தெலுங்கில் ஐதராபாத்தில் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தை மையப்படுத்துவோம். அந்தந்த மொழி நடிகர்கள் நடிப்பார்கள். என்கிறார் இயக்குனர் சந்திரமகேஷ்.