தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போதைய ஹீரோக்கள் சிலர் நான் நாயகன் அல்ல கதையின் நாயகன் என்று சொல்லிக்கொண்டு திரிவதைப்போன்று இப்போது நயன்தாராவும் நான் நாயகி அல்ல கதையின் நாயகி என்று கூறி வருகிறார். நயன்தாராவின் இந்த திடீர் ஸ்டேட்மென்டுக்குப்பிறகு அவரை மரத்தை சுற்றி டூயட் பாட வைப்பதை தவிர்த்து, வித்தியாசமான கேரக்டர் நடிகை கோணத்தில் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள்.
அதோடு, நைட் ஷோ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடிப்பதால், வெயிட்டான பர்பாமென்சை வெளிப்படுத்தக்கூடிய கதைகளுடன் நயன்தாராவை சந்தித்து வருகின்றனர். அப்படி தன்னை நாடி வரும் டைரக்டர்களிடம் முன்பு மாதிரி படப்பிடிப்பு தளத்துக்கு அவர்களை வரவைத்து இரண்டுவிதமான மனநிலையுடன் கதை கேட்காமல், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனிமையில் அமர்ந்து கதை கேட்கிறார் நயன்தாரா.
அதோடு, சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளை கடந்து விட்ட பிறகு, நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால், ஸ்ரீராமராஜ்யம் படம் மட்டுமே என் பெயர் சொல்லக்கூடியதாக அமைந்துள்ளது. வேறு எந்த படத்தையும் நான் பெருமையாக சுட்டிக்காட்ட முடியவில்லை என்று கூறும் நயன்தாரா, நடிப்புக்காக எந்தமாதிரி தியாகத்தையும் செய்யத்தயாராக இருக்கிறேன். அதனால், என்னை அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்லும் கதைகளுடன் வாருங்கள். என் திறமைக்கு சரியான தீனி போடுங்கள் என்று அவர்களை கேட்டுக்கொள்கிறாராம் நயன்தாரா.