தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விமல் நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் நேற்று இன்று. இந்த படத்தில் வெளுத்துக்கட்டு அருந்ததி ஒரு ஆபாச கேரக்டரில் நடித்திருந்தார். கதைப்படி ஐபிஎஸ் அதிகாரியான அவர் விலைமாது போன்று நடித்து, காட்டுக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகளை உளவு பார்ப்பார். அப்போது அவர்கள் செய்து கூட்டுக்களவாணித்தனத்தையும் மேல்அதிகாரியிடம் காட்டிக்கொடுத்து தனது கேரக்டரை முழுமை செய்திருப்பார்.
ஆனால், இந்த கேரக்டரில் ஆரம்பத்திmf நடித்தபோதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார் அருந்ததி. அப்படத்தின் டீசர் வெளியானபோது அவரது ஆபாச குளியலைப்பார்த்து அவரே மிரண்டு விட்டார். இந்த அளவுக்கு நான் நடிக்கவில்லை, எப்படியோ என்னை ஏமாற்றி படமாக்கி விட்டார்கள் என்று டைரக்டர் மீது புகார் கூறினார். தற்போது திரைக்கு வந்துள்ள அப்படத்தில் சென்சார் அதிகாரிகள் கைவரிசை காட்டியபோதும்கூட பல காட்சிகளில் ஆபாச நெடி தூக்கலாக உள்ளது.
இதுபற்றி அருந்ததியை கேட்டபோது, மற்றவர்களைப் பொறுவத்தவரை அது நான் நடித்தது ஆபாச வேடம் போல் தெரியலாம். அதேசமயம் கதையோடு ஒன்றிப்பார்க்கும்போது நான் ஏற்று நடித்த ஐபிஎஸ் வேடத்தை நிறைவாக செய்திருப்பதாகவே கருதுகிறேன். அந்த வகையில் நான் இதுவரை நடித்ததில் இந்த படத்தில் நடித்தது சிறப்பான வேடம்தான் என்கிறார் அருந்ததி.
அப்படியென்றால், தொடர்ந்து இதுபோன்ற வேடங்களில் நடிப்பீர்களா? என்று அவரைக்கேட்டால், சென்சார் அனுமதிக்கும் அளவுக்கு கிளாமராக நடிப்பதில் எனக்கும் ஒன்றும் ஆட்சேபனை இல்லை. மேலும், இதுவரை குடும்ப கதாபாத்திரங்களாக நடித்து வந்த நான் இனிமேல் இதுபோன்ற மாடர்ன் கெட்டப்பில் வேடங்களில நடித்து எனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டவே விரும்புகிறேன் என்கிறார் அருந்ததி