இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த 'ஹாலிடே' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாம். இந்த ஆண்டில் 'ஜெய் ஹோ, 2 ஸ்டேட்ஸ்' ஆகிய படங்களுக்கு அடுத்து 100 கோடி ரூபாய் கிளப்பில் 'ஹாலிடே' படமும் இணைந்துள்ளது. இதையடுத்து அடுத்தடுத்து 'கஜினி, ஹாலிடே' படங்கள் மூலம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளார். அவரை ஒரு கமர்ஷியல் இயக்குனராக பாலிவுட் வட்டாரங்கள் பாராட்டித் தள்ளுகிறதாம். சில முன்னணி நடிர்கள் அவருடன் இணைந்து பணிபுரிய தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே முருகதாஸ் தற்போது விஜய்யை வைத்து இயக்கி வரும் 'கத்தி' படத்தின் இந்தி உரிமையையும் வாங்கி, அதில் முருகதாஸ் இயக்கத்திலேயே நடிக்க வேண்டும் என்று அக்ஷய் முடிவெடுத்துள்ளாராம். அதோடு தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பிரபு தேவா இயக்கத்தில், வெற்றிப் படத்தில் நடித்தவர், இப்போது மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் வெற்றிப் படத்தில் நடித்துள்ளதால் தமிழ் இயக்குனர்களின் மீதும், தமிழ்ப் படங்களின் மீதும் மிகுந்த மரியாதை வந்து விட்டதாம். படப்பிடிப்பின் போதே முருகதாசிடம் அவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். விரைவில் அக்ஷய் குமார் தமிழ்ப் படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முன்பெல்லாம் இங்கிருந்து, இந்திக்குப் போய் நடிக்கவோ, இயக்கவோ ஆசைப்படுவார்கள். இப்போது காலம் மாறி வருகிறது, இங்குள்ள திறமைசாலிகளால் இந்தியிலிருந்து இங்கு வந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள். இது நல்ல மாற்றம் என கோலிவுட்டில் உள்ள இயக்குனர் மகிழ்ச்சியடைந்துள்ளார்களாம்.