இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் அதையடுத்து தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்துவிட்டு மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறார். அந்தவகையில், காதலில் சொதப்புவது எப்படி ஓரளவு ஹிட்டடித்து அவருக்கு நம்பிக்கை கொடுத்ததால் அதையடுத்து தெலுங்கைகூட ஓரங்கட்டிவிட்டு முழுநேர தமிழ் நடிகராகியிருக்கிறார்.
அந்த வகையில், உதயம் என்எச்-4, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களில் நடித்தவர் அதையடுத்து, வசந்த பாலன் இயக்கியுள்ள காவியத்தலைவன் படத்தில் நடித்திருப்பவர், பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்திலும் நடித்து விட்டு அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முதலாக அதிரடி ஆக்சன் ஹீரோவாக இறங்கியிருக்கும் சித்தார்த், படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சமீபத்தில்தான் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையே, தன்னிடம் கதை சொல்லியிருக்கும் சில இயக்குனர்களையும் வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் சித்தார்த். காரணம், ஜிகர்தண்டா வெளியான பிறகுதான் உங்களது கதைகளில் நடிப்பதா? வேண்டாமா? என்ற முடிவையே என்னால் சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறாராம். இப்படி சித்தார்த் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா, இம்மாதம் 27ந்தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆக இதன்பிறகு தான் சித்தார்த்தின் ரூட் இனி ஆக்சனா? இல்லை மீண்டும் ரொமான்சா? என்பது தெரியவருமாம்.