டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடல் படத்தில் நடித்து முடித்த பிறகு கௌதம் கார்த்திக் கேட்ட கதைகளில் ஒன்றுதான் கொம்பன். எம்.சசிகுமாரை வைத்து குட்டிப்புலி படத்தை இயக்கி வந்த முத்தையா, அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்தப் படத்தை கமிட் பண்ணிக் கொண்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அதன்படி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை சந்தித்து கொம்பன் கதையைச் சொன்னார். மைக்கேலுக்கு முத்தையா சொன்ன கதை பிடித்துப்போனது. கதாநாயகன் யார் என்று ஆலோசிக்கப்பட்டபோது, கௌதம் கார்த்திக் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னார் முத்தையா. உடனே கௌதம் கார்த்திக்கை தொடர்பு கொண்டனர். அவரும் கதை கேட்டார். அவருக்கு மட்டுமல்ல, அவரது அப்பா கார்த்திக்குக்கும் முத்தையா சொன்ன கதை பிடித்துப்போனது.
கொம்பன் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க ஒப்புக்கொண்டார். குட்டிப்புலி ரிலீஸுக்குப் பிறகு கொம்பன் படத்தை ஆரம்பிப்பது என்று முடிவானது. சில வாரங்களில் குட்டிப்புலி ரிலீஸ் ஆனது. படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தான் அறிமுகமான கடல் படமும் ஓடவில்லை, அடுத்து நடித்த என்னமோ ஏதோ படமும் ப்ளாப். இந்நிலையில் ஒரு தோல்விப்பட இயக்குநரின் படத்தில் நடித்தால் நம் எதிர்காலம் என்னாகுமோ என பயந்த கௌதம் கார்த்திக், குட்டிப்புலி தோல்விப்படத்தைக் கொடுத்த முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகே கார்த்தியை சந்தித்து கதை சொன்னார் முத்தையா. அவருக்கு கதை பிடித்துப்போக, கொம்பன் படத்தை உடனே தொடங்கிவிட்டனர்.