ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை அஞ்சலி தன் சித்தியிடமிருந்து பிரிந்து சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழில் சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் களஞ்சியம் இயக்கிய ஊர்சுற்றிபுராணம் படத்தில் நடித்து வந்த அஞ்சலி அவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தொடர்ந்து நடிக்க மறுத்து வருகிறார். இதுகுறித்து களஞ்சியம் இங்குள்ள அனைத்து சினிமா அமைப்புகளிடமும் புகார் அளித்துள்ளார். களஞ்சியம் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு தமிழ் படத்தில் அஞ்சலி நடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் களஞ்சியம் தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் (புரட்யூசர் கில்டு) புகார் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கில்டு ஆந்திர பிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது வருமாறு:
மு.களஞ்சியம் தயாரித்து டைரக்டு செய்யும் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தில் நடிப்பதற்கு அஞ்சலி சம்மதித்ததுடன் 2013 மார்ச் மாதம் 10 நாட்கள் நடித்தார். அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட சொந்த பிரச்சினை காரணமாக அஞ்சலி, ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்க மறுக்கிறார். இதனால் களஞ்சியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி படம் எடுத்து வருகிறார். அஞ்சலி, கால்ஷீட் கொடுக்காததால், களஞ்சியத்தின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.
அஞ்சலி ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல், புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்திலும், தீரா ராணா விக்ரமா என்ற கன்னட படத்திலும் நடிக்க சம்மதித்து இருக்கிறார். களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தை முடித்துக்கொடுக்காமல், வேறு எந்த புதிய படத்திலும் அஞ்சலி நடிக்கக்கூடாது. இதை தெலுங்கு பட அதிபர்களுக்கு தெரிவித்து, அஞ்சலி புதிய படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் அஞ்சலி எங்கிருந்தாலும் தூக்கிட்டு வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம் என்று ஒரு விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது.