Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அஞ்சலிக்கு தடை விதியுங்கள்: ஆந்திர பிலிம் சேம்பருக்கு கில்டு கடிதம்.

22 ஜூன், 2014 - 16:34 IST
எழுத்தின் அளவு:

நடிகை அஞ்சலி தன் சித்தியிடமிருந்து பிரிந்து சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தமிழில் சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.


இயக்குனர் களஞ்சியம் இயக்கிய ஊர்சுற்றிபுராணம் படத்தில் நடித்து வந்த அஞ்சலி அவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தொடர்ந்து நடிக்க மறுத்து வருகிறார். இதுகுறித்து களஞ்சியம் இங்குள்ள அனைத்து சினிமா அமைப்புகளிடமும் புகார் அளித்துள்ளார். களஞ்சியம் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு தமிழ் படத்தில் அஞ்சலி நடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் களஞ்சியம் தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் (புரட்யூசர் கில்டு) புகார் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கில்டு ஆந்திர பிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது வருமாறு:

மு.களஞ்சியம் தயாரித்து டைரக்டு செய்யும் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தில் நடிப்பதற்கு அஞ்சலி சம்மதித்ததுடன் 2013 மார்ச் மாதம் 10 நாட்கள் நடித்தார். அதன்பிறகு அவருக்கு ஏற்பட்ட சொந்த பிரச்சினை காரணமாக அஞ்சலி, ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்க மறுக்கிறார். இதனால் களஞ்சியத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் கோடிக்கணக்கில் கடன் வாங்கி படம் எடுத்து வருகிறார். அஞ்சலி, கால்ஷீட் கொடுக்காததால், களஞ்சியத்தின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.
அஞ்சலி ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல், புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்திலும், தீரா ராணா விக்ரமா என்ற கன்னட படத்திலும் நடிக்க சம்மதித்து இருக்கிறார். களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தை முடித்துக்கொடுக்காமல், வேறு எந்த புதிய படத்திலும் அஞ்சலி நடிக்கக்கூடாது. இதை தெலுங்கு பட அதிபர்களுக்கு தெரிவித்து, அஞ்சலி புதிய படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் அஞ்சலி எங்கிருந்தாலும் தூக்கிட்டு வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம் என்று ஒரு விழாவில் பேசியது குறிப்பிடத்தக்கது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in