திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கடந்த 12-ந்தேதி டைரக்டர் விஜய்-நடிகை அமலாபால் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதையடுத்து, தான் தயாரித்து இயக்கியுள்ள சைவம் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடைபெற்றதால், தேனிலவுக்கு செல்வதை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்திருந்த அவர்கள், இந்த வார தொடக்கத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் கொண்டாட புறப்பட்டனர்.
அங்குள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தேனிலவை ஜாலியாக கொண்டாடும் அவர்கள், பிடித்தமான பகுதிகளை பட்டியலிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று சுற்றிப்பார்த்து தேனிலவை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். அப்படி செல்லும்போது, எடுக்கும் போட்டோக்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தார் அமலாபால்.
ஆனால், அதைப்பார்த்த அவரது சினிமா உலக நண்பர்களும், உறவினர்களும் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பினர். ஆனால, சில ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களைப்பார்த்து அசிங்கமான கமெண்ட்ஸ் கொடுத்து விட்டார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த அமலாபால், தான் பேஸ்புக்கில் வெளியிட்டிருநத அனைத்து ஹனிமூன் போட்டோக்களையும் உடனடியாக பேஸ்புக் தளத்தில் இருந்தே நீக்கி விட்டார்.
அதோடு சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட எனக்கு வாழ்த்து சொல்லவேண்டும். ஆனால், மனசு புண்படும் வகையில் கமெண்ட் கொடுத்து விட்டீர்களே என்றும் தனது வேதனையை தெரிவித்துள்ளார் அமலாபால்.