இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சேட்டை படத்தை அடுத்து மு.களஞ்சியம் இயக்கி, நாயகனாக நடித்த ஊர் சுற்றி புராணம் என்ற படத்தில் 12 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஞ்சலி, அதையடுத்து தனது சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னிடம் பண மோசடி செய்து விட்டதாக சொல்லிக்கொண்டு ஆந்திராவுக்கு ஓடினார். அதோடு ஊர் சுற்றி புராணம் படத்தில் தொடர்ந்து நடிப்பதற்கும் மறுத்து வந்தார்.
இந்த நிலையில், தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வரும் அஞ்சலி, சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நடிக்க அழைப்பு தேடிச்சென்றபோது, பெரிய ஹீரோ படம் என்றதும் உடனே ஓ.கே சொன்னவர் அட்வான்சையும் வாங்கி விட்டார். ஆனால், இந்த சேதி வெளியில் கசிந்தபோது, உஷாராகி விட்டார் மு.களஞ்சியம்.
உடனடியாக தயாரிப்பாளர், இயக்குனர் சங்கங்களுக்கு கடிதம் எழுதினார். அதில் தனது படத்தை முடித்துக்கொடுத்த பிறகுதான் அஞ்சலியை வேறு படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அஞ்சலியை அழைத்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாரானது இயக்குனர் சங்கம்.
ஆனால் இதையறிந்த டைரக்டர் சுராஜ், அஞ்சலியை நடிக்க வைத்தால் ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும் போல் இருக்கிறதே என்று யோசித்தவர், அஞ்சலியிடம் கொடுத்த அட்வான்சை திருப்பிக்கேட்டதோடு, அவர் நடிக்கயிருந்த வேடத்துக்கு காஜல்அகர்வாலை ஒப்பந்தம் செய்து விட்டார். விசயம் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரியாமல் இருந்த அஞ்சலி, வேறு வழியில்லால் அந்த படத்துக்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக்கொடுத்து விட்டாராம். இதனால் அடுத்தடுத்து அஞ்சலியை புக் பண்ண தயாராகயிருந்த இயக்குனர்களும் இப்போது பின்வாங்கி விட்டனர்.
ஆக, அஞ்சலியின் ரீ-என்ட்ரி ஒர்க்அவுட்டாகவில்லை. அதோடு, களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணமும் கிடப்பில் கிடக்கிறது.