தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர்கள் சீமான், சமுத்திரகனியிடம் உதவியாளராக இருந்த ஆர்.நாகேந்திரன் இயக்கும் படம் நீயெல்லாம் நல்லா வருவடா. விமல், சமுத்திரகனி, அமிர்தா, பார்பி ஹண்டா நடிக்கிறார்கள். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுபற்றி இயக்குனர் ஆர்.நாகேந்திரன் கூறியதாவது:
கடந்த 20 வருடங்களாக சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் நடந்த எல்லாவிதமான கொலைகளிலும் கூலிப்படையினரின் பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகி விட்டது. யாரை கொலை செய்கிறோம், எதற்காக கொலை செய்கிறோம் என்பது தெரியாமல பணம் ஒன்றுதான இவர்கள் குறிக்கோளாக இருகிறது. இந்த கூலிப்படை குறித்த உண்மைகளை பதிவு செய்கிற படம்தான் இது. 40 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. வேகமாக படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. என்றார்.