டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்து, எல்லோருக்கும் ரசிகனாகி(ரசிகன்), காதலுக்கு மரியாதை கொடுத்து, துள்ளாத மனதையும் துள்ள வைத்து, தனது படங்களை ஒன்ஸ்மோர் கேட்க செய்து, என்றும் யூத்தாய், அழகிய தமிழ் மகனாய், காவலனாய், நண்பனாய், தலைவனாய் உருவெடுத்துள்ள விஜய்க்கு இன்று(ஜூன் 22ம் தேதி) 40வது பிறந்தநாள். விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள். விஜய் இந்தளவுக்கு இன்று சினிமாவில் விஸ்வரூபம் எடுக்க அவரது கடின உழைப்புகள் இருந்தாலும், அவரது வளர்ச்சியில், சிலருக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர்கள் பற்றிய சிறப்பு செய்தியை விஜய் பிறந்தநாளில் உங்களுக்கு வழங்குகிறோம் இதோ....
எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜய் தந்தை
தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி அவையத்து முந்தி இருப்ப செயல் -எனும் குறலுக்கு ஏற்ப குருவாய், தந்தையாய், தயாரிபாளராய், இயக்குனராய், வழி காட்டியாய், இன்று வரை விஜய்க்கு மாபெரும் சக்தியாய் விளங்குபவர் எஸ்.ஏ.சி., என்று அழைக்கப்படும் எஸ்.ஏ.சந்திரசேகர்.
தன் மகன் விஜய் பற்றி பேசுகிறார், இதோ ஒரு அப்பாவாக....
விஜய் வளர்ச்சியை பார்க்கும் போது பெருமையாய் இருக்கிறது. அவர் நடிக்க வந்த புதிதில் ரொம்ப சின்ன வயசில ஏதும் தெரியாது. இந்த துறைக்கு வந்த பிறகு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இவ்வளவு பாதைகளை கடந்து வந்திருக்கிறார் என்றால் அவரின் கடின உழைப்பும், டெடிகேஷனும் தான் காரணம். அவரிடம் இப்போதும் வியந்து பார்ப்பது, எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும் ரொம்ப ஈசியா டீல் பண்ணுவார். பரபரப்பா எது நடந்தாலும் ரொம்ப அமைதியா கையாளுவார்.
சின்ன வயசில இருந்து பெரியவர்கள் வரை, விஜய் ரசிகர்களாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். பலரும் அவரை ரோல் மாடலாக எடுத்து கொள்கிறார்கள். ஒரு தயாரிப்பாளருக்கு நல்ல நடிகனாய், ஒரு இயக்குனருக்கு நல்ல ஆர்டிஸ்ட்யாய், ஹீரோயினுக்கு நல்ல கோ ஸ்டாராய், இப்படி ஒவ்வொருத்தருக்கும் விஜய்யை பிடித்திருப்பது, தந்தையாய் எனக்கும் பிடித்திருகிறது. எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதெல்லாம் விட, திரை உலகில் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும் என்பது எங்களின் ஆசை. மேலும் அப்பா பிள்ளையாய் எப்போதும் இருக்க ஆசைப்படும் விஜய் தந்தை, விஜய்க்கு நம் மூலமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறார். ஒரு சிற்பியாய் விஜய்யை திரை துறையில் செதுக்கி எடுத்தவர் எஸ்.ஏ.சி., என்றால் மிகயைல்ல.
பி.டி.செல்வக்குமார் - விஜய் மக்கள் தொடர்பாளர்
திருநெல்வேலியில் இருந்து சினிமா ஆர்வத்தால் சென்னை வந்து சேர்ந்தவர்
செல்வகுமார். பல இடங்களில் வேலைக்கு அலைந்து, கடைசியாக ஜெமினி
பத்திரிகையில் வேலை கிடைத்த அனுபவம்,அங்கே சப் எடிட்டராக பதவி உயர்வு
பெற்று தன் பணியை திறம்பட செய்து காட்டினார். அந்த சமயத்தில் தான் விஜய்யின் அப்பாவின் நட்பு கிடைத்து. விஜய்யின் வட்டத்துக்குள் உள்ளே வந்தவர், ரசிகன், நாளைய தீர்ப்பு போன்ற படங்களில் தன் பங்களிப்பை காட்டி உள்ளார்.
விஜய் - சிம்ரன் நடித்த ஒன்ஸ்மோர் படம் மூலம் முறைப்படி பத்திரிக்கை மக்கள் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட விஜய் நடித்த 25 படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்திருக்கிறார். எல்லாருக்கும் சினிமாவில் ஒரு கனவு இருக்கும். எப்படியாவது விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் அல்லது விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று...
செல்வகுமாருக்கும் சொல்லதெரியாத ஆசையும் கனவும் அடி மனதில் ஆழமாய் இருந்து கொண்டே இருந்திருகிறது. ஆனால் அவரே எதிர்ப்பார்க்க முடியாத வகையில் விஜய் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். தன வளர்ச்சியில் தன்னோடு இருந்தவர்களை, உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டு இருக்கிறார். அது ஜில்லா 100-வது நாளில் நிறைவேற தொடங்கியது. அதாவது செல்வகுமாரை தன் அடுத்த படத்தில் தயாரிப்பாளர் ஆக்குவது என்பது. இது அவரும், எவரும் நினைத்து பார்க்காத ஒன்று. தன்னை நம்பி இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததை எண்ணி, இன்றும் அந்த பதட்டம் தனியாமலே இருக்கிறார் மக்கள் தொடர்பாளர்.
உலக அளவில் தன் மக்கள் தொடர்பாளருக்கு தயாரிபாளராக்கிய பெருந்தன்மை , விஜய்க்கு மட்டுமே உண்டு. என்னை இப்படி உயர்ந்த இடத்துக்கு கூட்டி போன, விஜய் சார்க்கு வெறும் நன்றியை மட்டும் ஒரே வார்த்தையில் சொல்லிட முடியாது. வாழ்நாளில் எப்போதும் நான் கடமை பட்டிருக்கிறேன் என்கிறார் கண்ணீர் மல்க.
விஜய்யின் காஸ்டியூம் டிசைனர் ராஜேந்திரன்
வைதீஸ்வரன் கோவிலில் இருந்து சினிமா ஆர்வத்தால் 1968 இல் சென்னை வந்தவர் ராஜேந்திரன், நடிகை ஷோபா உட்பட பிரபல நடிகைகளுக்கு காஸ்டியும் டிசைனராக இருந்தவர். விஜய் நடித்த வசந்த வாசல் படம் மூலம் விஜய் உடைகளுக்கு பொறுப்பேற்றவர், சமீபத்தில் ஷூட்டிங் நடக்கும் கத்தி படம் வரை இவரின் உடைகள் விஜயை அலங்கரித்து வருகின்றன. கிட்டதட்ட 35 படங்களில் பணி புரிந்ததின் மூலம் விஜயை நன்கு புரிந்து வைத்துள்ளார். அவரின் ஆசைகளை ஆடையாக்கி அழகு பார்த்து வருகிறார் ராஜேந்திரன். நினைத்தேன் வந்தாய் போன்ற பல படங்களில் பாட்டிற்காகவே இவரின் உடைகளுக்கு பாராட்டலாம்.
சின்ன குழந்தைககள் முதல் பெரியவர்கள் வரை விஜய்யின் நடை உடை நாட்டியத்தை ரசிப்பவர்கள் ஏராளம் எல்லவிதமான உடைகளும் விஜய்க்கு பொருந்துவதொடு, அவ்வபோது வரும் டிரெண்ட், ஸ்டைல், இன்டர்நெட் மற்றும் புத்தக குறிப்புகள் இப்படி எல்லாவற்றையும் விஜய்யுடன் கலந்து பேசி அவர் ஒப்புதல் பெற்று, புத்தம் புது வடிவில், இளமை பொங்கும் விஜய்யை, கண்ணுக்கு இனிமையாய், தன் உடை அலங்காரத்தால் பங்கெடுத்து கொள்ளும் ராஜேந்திரன், விஜய் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமு - விஜய்யின் முதன்மை மேலாளர்
காரைக்குடி கல்லுபட்டியில் இருந்து சென்னை வந்தவர் ராமு. இவரின் முதல் தொழில் மயிலையில் மருந்து தொழில். 12 வருட போராட்டத்திற்கு பிறகு உறவினர் ஒருவரின் தகவலின் படி விஜய் அலுவகத்தில் கணக்கு மேற்பார்வை வேலையில் சேர்ந்தார். நெஞ்சினிலே படத்தின் போது மேலாளரானார். நாட்கள் செல்ல செல்ல, இவர் மேல் விஜய்க்கு மெல்ல மெல்ல நம்பிக்கை துளிர்ந்தது, ராமுவை தன் தனிப்பட்ட கணக்கு வழக்குகளை பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்தார் விஜய்.
தன் வயதுக்கு இளையவராக இருந்தாலும் தன்னை அன்ணா என்று அழைக்கும் பாங்கு. காலம் முழுக்க அவர் காலை கட்டி போட்டு விட்டது, பந்தா பகட்டு இன்றி விஜய்யின் எளிமை எதையும் கூர்ந்து கேட்கும் ஆர்வம், கவனத்தோடு செயல்பட வைக்கும் திறன் ராமுவை இன்னும் மெருகேற்றி வைத்தது. தயாரிப்பாளர்கள், காசோலை மற்றும் கணக்கு வழக்கு முக்கியமானவர்களை சந்திப்பது என நாளுக்கு நாள் விஜய்யின் நம்பிக்கை பாத்திரமாகி தன் வாழ்வில், நல்ல சகோதரனாக,நல்ல தந்தையை கிடைக்க பெற்ற சந்தோஷத்தில் 16 வருட பயணம், விஜய் மற்றும் அவர் தந்தையால் நல்வழிபட்டதாய் உணரும் ராமு, விஜய்க்கு தன் பிறந்தநாள் வாழ்த்தையும் இங்க பதிவு செய்கிறார்.
ரவி ராஜா - இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர்
சினிமா டிசைனரிடம் உதவியாளராக இருந்தவர், பல பகுதிகளிலும் கலை குழு
வைத்து நடத்தி வந்தவர் ரவி ராஜா. நாளைய தீர்ப்பு படத்தில் உதவியாளர்,
1992 இல் விஜய்க்காக தொடங்கப் பட்ட முதல் ரசிகர் மன்றத்தில் சேர்ந்துள்ளார், செந்தூர பாண்டி திரைபடத்தின் போது, அகில இந்திய மாநில பொறுப்பாளராக இருந்தவர், தன் கடின உழைப்பால் விஜய்யின் இதய சிம்மாசனத்தில் இடம் கிடைத்து பூவே உனக்காக திரைப் படத்தில் மாநில துணை தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தான் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவு இவருக்கு இருந்துள்ளது. அதை எஸ்.ஏ.சி., அவர்கள் நடிப்பில் இனிமேலாவது என்ற
குறும்படம் எடுத்து நிறைவேற்றி உள்ளார்.
காலம் மெல்ல நகர நகர சினிமா இயக்குனர் ஆசையை மூட்டை கட்டி விட்டு,தற்போது விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளராக திறம்பட செயல்பட்டு வருகிறார். ரத்ததானம், கண் தானம், படிப்பு உதவி, போன்ற பல நல்ல விஷயங்களை விஜய் மக்கள் இயக்கம் மூலம் செய்து
வருகிறார். பல வருடங்களுக்கு முன், 64,காவேரி தெரு,சாலிகிராமத்தில் விஜய் ஆசையாய் கட்டி கொடுத்த வீட்டில், விஜய் மூச்சாக கொண்டு, வசிக்க இடமும், வயிற்றுக்கு உ ணவும் கொடுத்த விஜய்யை வாழ்நாள் முழுதும் கடமை பட்டவராய் வாழ்ந்து வருகிறேன் என்று தன் பிறந்தநாள் வாழ்த்தையும் இங்கு தெரிவிக்கிறார்.
குமார் - விஜய் மக்கள் இயக்க மாநில துணை செயலாளர்
தஞ்சாவூர் பட்டுகோட்டையை சொந்த ஊராக கொண்டவர் குமார். 10 வயசில் சினிமா ஆசை இவரை தொற்றி கொண்டது. வசந்த வாசல் படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மாமா செல்வம் அவர்களின் அறிமுகத்தோடு விஜய் அலுவலகத்தில், ஆபீஸ் பாய் வேலை பார்த்தவர், தன கடின உழைப்பாலும் நம்பிக்கையாலும், படிப்படியாக உயர்ந்து தற்போது, விஜய் மக்கள் இயக்க மாநில துணை செயலாளராக உள்ளார்.
பூவே உனக்காக படம் பார்த்து பாதிப்படைந்து, விஜய்யிடம் எப்படியாவது சேர வேண்டும் என்ற உந்துதல், அவரின் எளிமை, மௌனம், குமாருக்குள் ஒரு நல்ல விதையை விதைத்து விட்டது விஜய் மூலம். வாழ்வில் ஏதேனும் செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற வெறியும் வேட்கையும் குமார் கண்களில் தெரிகிறது. சமீபத்தில் தன் தங்கை திருமணத்திற்கு சீர் செனத்தி செய்ய, சொந்த ஊருக்கே வந்து சொந்தங்களை வியப்படைய வைத்தாராம் விஜய் தந்தை. இப்படி மூச்சும், பேச்சும் விஜய்க்காக இருக்கும் என்கிறார் குமார். அப்படியே பிறந்தநாள் வாழ்த்தையும் பதிவு செய்கிறார்.
செல்வம் - புரொடக்ஷன் மற்றும் விஜய்க்கு உணவு உபசரிப்பவர்
திருச்சியில் இருந்து 7 வயதில் சென்னைக்கு சினிமா ஆர்வத்தால் வந்தவர்
செல்வம். எல்டாம்ஸ் லாட்ஜில் வேலை பார்த்த அனுபவத்தோடு, அங்கே பல
சினிமா பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு, எப்படியோ வீட்டுக்கு ஒரு கண்ணகி படத்தில் எஸ்.ஏ.சி., இடம், புரொடக்கசன் வேலைக்கு சேர்ந்தவர் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் முழு பொறுப்பையும் ஏற்றவர், கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் விஜய் கூடவே இருந்து கவனித்து வருகிறார். மேலும் விஜய் ஷூட்டிங் நாட்களில் காலை சாப்பாடு, வீட்டில் சாபிட்டு, ஷூட்டிங் இல் வந்து நுழைந்தவுடன், செல்வம் விஜய்யின் முழு பொறுப்பையும் ஏற்று கொள்கிறார். ஷூட்டிங்கில் இந்த சாப்பாடு வேணும் அந்த சாப்பாடு வேணும் என்று எந்த நிர்பந்தமும் செய்யாதவராய், குறிப்பாக ஷூட்டிங்கில் சாப்பாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுகாதவராய் விஜய் இருந்து வருகிறார். அதிகமாக சாப்பாடு எடுத்து கொள்ளாதவர் , சில நேரம் சப்பாத்தி சாப்பிடுவார் , தோசை அதிகமாக விரும்பி சாபிடுவதுண்டு ,கிட்டத்தட்ட 25 வருடங்களாக விஜயுடன் பயணித்து வரும் செல்வம் , எந்த நேரத்திலும் விஜய்க்கு கோபம் வந்ததில்லை, ஏதேனும் தவறு செய்தாலும் அதை மனதிலே வைதிருக்காதவர், அவரின் எளிமை, அடுத்தவரை அரவணைத்து செல்லும் தன்மை, பழகும் பண்பு, பாசம் இப்படி மொத்தமாக கூட இருபவர்களை, தன் அன்பால் அணைத்து செல்லும் விஜய், தன் வாழ்வில்
கிடைத்தது பெரும் பாக்கியமாக நினைக்கிறார் செல்வம்.