'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் நடிகர் விஜய். அதில், மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியினால் சினிமாத்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறை அழிவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதை படித்த பலர் சமூக வலைதளங்களில், பல கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய்க்கெல்லாம் கேளிக்கை வரியினை ரத்து செய்தால், என் போன்று சில ஆயிரங்களையே சம்பளமாக வாங்கும் சாமான்யர்களுக்கு இந்த அரசாங்கம் வரியை உடனடியாக ரத்து செய்தாக வேண்டும் என்று தங்கள் தரப்பு கருத்தினை தெரிவித்திருந்தனர்.
மேலும், விஜய்யின் இந்த கடிதத்தினால் தலைவாவைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் கத்தி படத்தின் ரிலீசுக்கும் மறைமுகமான எதிர்ப்புகள் எழ அதிக வாய்ப்பு உள்ளது என்றும் இணையதள நேயர்கள் கருத்து பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.