ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில்தான் நாடக நடிகைகள் சினிமா நடிகையானார்கள். இந்தக் காலத்தில் இது ரொம்பவும் அபூர்வம். ஆங்கில நாடகங்களில் நடித்த ஆண்ட்ரியா சினிமா நடிகையானார். இப்போது அவர் வழியில் டில்லியில் ஆங்கில நாடக நடிகையாக இருந்த சலோனி லுத்ரா சரபம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமமாகிறார்.
இந்தப் படத்திற்காக சுமார் 100 பெண்களுக்கு நேர்காணல் நடத்தியும், ஆடிசன் பண்ணி பார்த்தும் தேர்வானவர்தான் சலோனி. "நாங்கள் நேர்காணல் நடத்திய பெண்களின் சலோனின் நடிப்பும், பெர்பக்ஷனும், எங்கள் கற்பனையில் இருந்த முகமும் சரியாக அமைந்ததால் தேர்வானார். மொழி ஒன்றுதான் அவருக்கு பிரச்னையாக இருந்ததே தவிர எந்த மாதிரியான உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டுமோ அதை அப்படியே பிரதிபலித்தார்" என்கிறார் இயக்குனர் அருண் மோகன். "ஹீரோயினுக்கு கொடுத்த சம்பளத்தை விட ஹீரோயின் தேடுவதற்கு நாங்கள் செலவிட்ட பணம்தான் அதிகம்" என்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
"இணையளத்தில் பார்த்துதான் ஆடிசனில் கலந்து கொண்டேன். ஆனால் தேர்வாவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கல்லூரியில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து வருகிறேன். நாடக அனுபவம் சினிமாவுக்கு கைகொடுத்தது. விரைவில் தமிழ் மொழியை கற்றுக் கொள்வேன்" என்கிறார் சலோனி.