பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் நடித்த வடகறி என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் வசனங்கள் பல இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது. குறிப்பாக பெண்களை சகட்டுமேனிக்கு வறுத்தொடுக்கின்றன வசனங்கள். இதை எல்லாம் மிஞ்சுகிற வகையில் ஒரு காட்சியில் ஹிந்தியில் உள்ள ஆபாசமான ஒரு கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வடகறி படத்தைப் பார்த்து அதிர்ந்துபோன சிலர் இது பற்றி, தணிக்கைக்குழு அதிகாரிக்கே போன் செய்து இது பற்றி புகார் தெரிவித்துள்ளனர். அந்த வார்த்தை கெட்ட வார்த்தை என்று எங்களுக்கு தெரியாது என்று தணிக்கைக்குழு அதிகாரி விளக்கம் அளித்தாராம். அதே சமயம் அந்த கெட்ட வார்த்தையை படத்திலிருந்து நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இது குறித்து காவல்துறையில் புகார் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ஒரு பெண்கள் அமைப்பு. கருணாநிதி ஆட்சியில் சிபாரிசு செய்யப்பட்டு தணிக்கைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் விசுவாசத்தைக் காட்ட கெட்ட வார்த்தையை அனுமதித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.