தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படம் பிணயக்கைதிகள் சம்மந்தப்பட்ட கதை. சுமார் 75 பேரை பிணயக்கைதியாக பிடித்து ஒரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர் தீவிரவாதிகள். அவர்களிடமிருந்து பிணயக்கைதிகளை விஜய் எப்படி மீட்கிறார் என்பதுதான் கத்தி படத்தின் கதை. பிணயக்கைதிகளை தீவிரவாதிகள் அடைத்து வைக்கும் லாட்ஜ் செட் சென்னையில் உள்ள புஷ்பா கார்டனில் போடப்பட்டது. அங்கு சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.
கத்தி படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு, 60 பைட்டர்களை வரவழைத்து அவர்களுக்கு தீவிரவாதிகளாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். இவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே 40 நாட்கள் எடுக்கப்பட்டது. பைட்டர்களை பொருத்தவரை ஒரு நாள் வேலை இருந்தால் இன்னொரு நான் வேலை இருக்காது. கத்தி படத்தில் தீவிரவாதிகளாக நடித்த வகையில் 60 பைட்டர்களுக்கும் 40 நாட்கள் தொடர்ந்து வேலை கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை வைத்து பல பைட்டர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டி உள்ளனர். இதை நன்றியுடன் குறிப்பிடும் பைட்டர்கள், ஏ.ஆர்.முருகதாஸை வாழ்த்தவும் செய்கின்றனர்.