‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து தொடர்ந்து இது பற்றிய செய்திகள் மீடியாவில் பரபரப்பாக அடிபட்டு வருகின்றன. ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியில் உள்ள அவரது பங்கை விற்கப் போவதாகவும், அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இவற்றையெல்லாம் ப்ரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார்.
நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்த பின் நேற்று அவருடைய டுவிட்டர் வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். “உங்கள் அனைவரது ஆதரவுக்கும் மிகப் பெரிய நன்றி. மீடியாக்களில் யூகங்களின் அடிப்படையில் வந்த செய்திகளைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஐபிஎல் பஞ்சாப் அணியிலுள்ள என்னுடைய பங்கை நான் விற்கப் போவதுமில்லை, அமெரிக்காவில் செட்டில் ஆகப் போவதுமில்லை. கேள்விப்பட்டதின் அடிப்படையில் எந்த செய்தியையும் எழுதாதீர்கள். இந்தியாவில் எவ்வளவோ முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. என்னுடைய செய்தியை விட பல செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அவற்றைப் பற்றி எழுதுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நெஸ் வாடியா மீது ப்ரீத்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. நெஸ் வாடியாவை சில தாதாக்கள் மிரட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் ப்ரீத்தி அவரது ஐபிஎல் பங்கை விற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் கொண்டாட்டமாக இருக்கும். எங்கே, 'கட்டிப்பிடி வைத்தியம்' அடுத்த ஆண்டு கிடைக்காதோ என்று ஏங்கியவர்களுக்கு அது திரும்பவும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சிதானே….