தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரேசில் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் கால்பந்து ஜுரம் அடிக்கிறது. சுமார் 300 கோடி மக்கள் தினமும் கால்பந்து போட்டியை ரசித்து வருகிறார்கள். அந்த ஜுரம் தமிழ் சினிமாவையும் விடவில்லை. கால்பந்து போட்டியை மையமாக வைத்து பிரேசில் என்ற தலைப்பிலேயே ஒரு படத்தை தயாரிக்கிறார்கள்.
குறும்படங்களை தயாரித்து வந்த மீரான் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அம்ஜத் மீரான் இயக்கி அவரே நடிக்கிறார். அவருடன் சண்டை பயிற்சியாளர் சில்வா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஓமர் ஒளிப்பதிவு செய்கிறார். குரு பிரசாத் இசை அமைக்கிறார்.
"சென்னை நகரத்தின் பாலத்திற்கு கீழ் வாழும் ஏழை இளைஞர்களுக்கு கால்பந்து என்றால் உயிர். கால்பந்து வீரரான ரோனால்டினோவை தெய்வமாக மதிக்கிறார்கள். எதிர்பாராத வகையில் அவர்கள் கால்பந்து விளையாட்டில் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கிறார்கள். அது என்ன என்பதுதான் கதை.
விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்கு முன்பாக தற்போது கால்பந்து போட்டிகள் நடந்து வருவதால் அது தொடர்பான புரமோஷன் பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளோம். அதை யு டியூப்பில் வெளியிடுகிறோம். தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும்" என்றார் அம்ஜத் மீரான்.