தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஒரு தலை ராகம் சங்கர் இயக்கும் முதல் தமிழ் படம் மணல் நகரம். இந்தப் படம் முழுக்க முழுக்க துபாயில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து துபாய்க்கு வேலைக்கு போகும் நண்பர்கள் ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் துபாய் பெண்ணை காதலிக்கிறான். துபாய் நாட்டு சட்டப்படி துபாய் பெண்ணை வேறு நாட்டவர் திருமணம் செய்ய முடியாது. ஆனால் காதலியை கைவிட தயக்கம். நண்பர்கள் இணைந்து எப்படி காதலர்களை ஒன்று சேர்க்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.
52 நாளில் படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். டி.வி தொகுப்பாளரா இருந்து நடிகரான பிரஜின்தான் ஹீரோ. தனிஷ்கா என்ற பெங்களூர் பொண்ணு ஹீரோயின். இவர்கள் இருவரையும் தவிர மற்ற அனைவரும் துபாயில் வசிக்கும் தமிழ், மற்றும் மலையாளிகள். துபாயைச் சேர்ந்த வருணா ஷெட்டி இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார். ஷங்கர் துபாய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விரைவில் படம் ரிலீசாகிறது