ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஐயா படத்தில் குடும்ப குத்து விளக்காக தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர் நடிகை நயன்தாரா. ஆனால் சில காலம் அதை மெயின்டெயின் பண்ணி வந்தவர், அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி நடிகையாக உருவெடுத்தார். அதனால் அதையடுத்து நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள கிடைத்தனர்.
அதேசமயம், ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்திலும் நடித்து தனது நடிப்புக்கு கெளரவம் தேடிக்கொண்டார் நயன். அதற்காக ஆந்திர அரசின் நந்தி விருதினையும் பெற்றார். இப்படி பலதரப்பட்ட வேடங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த நயன்தாரா, அனாமிகாவைத்தொடர்ந்து ஜெயம்ரவியுடன் நடிக்கும் தனி ஒருவன் படத்தில் ஆக்சன் நாயகியாகவும் அவதரித்து நிற்கிறார். இந்த நிலையில், நைட் ஷோ என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்கிறார் நயன்தாரா.
இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் டூயட் பாடும் வேடங்களில் நடிக்கிற வயதை இப்போது நான் கடந்து விட்டேன். அதனால், இனிமேல் மெச்சூரிட்டியான கதைகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று கூறுகிறார். அதோடு, இதுவரை டீசன்டான கேரக்டர்களிலேயே அதிகமாக நடித்திருக்கும் நான், இனிமேல், அழுக்குப்படிந்த அசிங்கமான கதாபாத்திரங்கள் என்றாலும், முழுசாக என்னை மாற்றிக்கொண்டு நடிப்பேன். நடிப்பு விசயத்தைப்பொறுத்தவரை இமேஜ் பார்க்கும் பழக்கத்தில் இருந்து முழுசாக விடுபட்டு விட்டேன் என்கிறார் நயன்தாரா.