மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய சினிமாவில் குடும்ப நடிகையாக ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் சுகாசினி. திருமணத்திற்கு பிறகும் தனது இமேஜை பாதிக்காத வேடங்கள் கிடைத்தால் அவ்வப்போது நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஞானராஜசேகரன் இயக்கியுள்ள ராமானுஜன் படத்தில் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.
முன்பெல்லாம் யாராவது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கக்கேட்டால், எனக்கென்ன அவ்வளவு வயசா ஆயிடுச்சு? என்று அவர்களைப்பார்த்து கண்களை உருட்டுவார் சுகாசினி. அதனால் இந்த ராமானுஜன் படத்தில் அவரை அம்மாவாக நடிக்கக் கேட்க சென்றபோது தயக்கத்துடன்தான் ஞானராஜசேகரன் அவரிடம் கேட்டாராம்.
ஆனால், அவர் சொல்லப்போகும் கதை வித்தியாசமானது என்பதால், ஜெமினிகணேசன்-சாவித்ரியின் பேரனான அபினய்க்கு அம்மாவாக நடிப்பதற்கு சம்மதம் சொன்னாராம் சுகாசினி. அதோடு, 50 வயதை கிராஸ் பண்ணி விட்டதால், இனி தொடர்ந்து வெயிட்டான அம்மா வேடங்கள் கிடைத்தால் நடிப்பதற்கும் தயாராகி விட்டார் அவர். இதனால், மனோரமாவிற்கு பிறகு அவரது அம்மா இடத்தை சரண்யா கைப்பற்றியிருந்தார்.
அவரைத்தொடர்ந்து இபபோது சுகாசினி களத்தில் இறங்கியிருப்பதால், அவரது நடிப்பில் ஈர்க்கப்பட்ட சில இயக்குனர்கள் சுகாசினியை அடுத்தபடியாக அம்மா வேடங்களில் நடிக்க வைக்க தயாராகி விட்டனர். இதனால், சமீபத்திய அம்மா நடிகையான சரண்யா அதிர்ச்சியில் இருக்கிறார்.