பிரிட்டீஸ் திரைப்பட கல்லூரியில் சந்தோஷ்சிவன்!
20 ஜூன், 2014 - 10:59 IST
தமிழில் இந்திரா, ராவணன், துப்பாக்கி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ்சிவன். இந்திய அளவில் பல மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் இவர், தற்போது அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக, ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இனம் என்ற படத்தை இயக்கி சர்ச்சைகளில் சிக்கினார்.
இவரை தற்போது பிரிட்டீஸ் திரைப்பட கல்லூரியில் நடைபெறும் ஒரு செமினாருக்காக அழைப்பு விடுத்துளளனர். இந்த செமினார் வகுப்புகளில் கிளின்ட், மன்செல், ஜாக்குவஸ் ஆடியார்ட், அலெஜான்ட்ரோ, கொன்சால்ஸ் உள்ளிட்ட பல உலக சினிமா பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்களாம்.
இதையடுத்து, இது உலக அளவில் எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ள சநதோஷ்சிவன், ஜூலை 11-ந்தேதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்படுகிறாராம். மேலும், வருடந்தோறும் நடைபெற்று வரும் இந்த செமினார் வகுப்புகளில், கடந்த ஆண்டு இந்தியா சார்பில் மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.