'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'டி - டே' என்ற இந்தி படத்தில்நடித்த பின், வட மாநிலங்களில் ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். அதே போல், அங்கு அவருக்கு பிரச்னைகளும் அதிகரித்து விட்டன. இதனால், ஸ்ருதியின் மும்பை வீட்டில், அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோது
கிறது. ஏற்கனவே ஒரு மர்ம நபர், வீட்டுக்குள் புகுந்தது போல், மறுபடியும் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தற்போது இரண்டு பாதுகாவலர்களை நியமித்துள்ளார் ஸ்ருதி. அவர்கள், ஸ்ருதி ஹாசன் படப்பிடிப்புக்கு செல்வது முதல், வீட்டிற்கு வருவது வரை, பின் தொடர்ந்து சென்று பாதுகாப்பு கொடுக்கின்றனராம்.தனியார் நிறுவனத்தின் மூலம், இந்த பாதுகாவலர்களை நியமித்துள்ள ஸ்ருதி, அவர்களுக்கு தேவையான அனைத்து செலவு
களையும் தானே செய்கிறாராம்.