600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பீயாகாக் என்ற புதிய பட நிறுவனத்தினர் தயாரிக்கும் படம் ஆலமரம். கே.பாக்யராஜின் உதவியாளர் எஸ்.என்.துரைசிங் இயக்குகிறார். ராம்ஜீவன் இசை அமைக்கிறார். உதய்சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹேமந்த் குமார், அவந்திகா மோகன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
"கோவில் இல்லாத ஊர் இல்லாத மாதிரி ஆலமரம் இல்லாத ஊரும் இருக்க முடியாது. ஆல மரம் மக்கள் கூடும் இடமாகவும், இளைப்பாரும் இடமாகவும், விளையாட்டு மைதானமாகவும். பிரச்னை பேசும் மன்றங்களாவும் இருந்திருக்கிறது. கிராமத்து மக்களுக்கு ஆலமரம் மறக்க முடியாத இன்னொரு வீடாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலமரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கதைகள்தான் படத்தின் கதை. அதன் வேர்கள் மண்ணுக்கு தெரியாமலும், விழுதுகள் கிளைபரப்பி நிற்பதையும் கதை மாந்தர்களாக உலவ விட்டு உணர்வுகளை பதிவு செய்கிறோம். படம் பார்த்துவிட்டு எங்காவது ஆலமரத்தை பார்க்க நேர்ந்தால் கும்பிடத் தோன்றும்" என்கிறார் படத்தின் இயக்குனர் துரைசிங்.