ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரள அரசு திரைப்பட விருதுகள் அந்த மாநிலத்தில் உயர்ந்த மதிப்புக்குரிய விருதுகளாக கருதப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவுக்கு தமிழ்த் திரைப்பட இயக்குனரான பாரதிராஜா தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன் இந்தத் திரைப்பட விருதுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே விருதுக் குழுவின் தலைவரான பாரதிராஜா இந்த விருதுகள் தேர்வுக்காக எத்தனை நாட்கள் கேரளாவில் தங்கியிருந்தார் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 'அன்டு த டஸ்க்' என்ற படத்தின் இயக்குனரான சஜின் பாபு கேட்டிருந்தார். அதற்கான பதில் அவருக்கு வழங்கப்பட்டது. அதில் பாரதிராஜா விருதுகள் தேர்வுக்காக வெறும் ஏழு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை பதினைந்து நாட்கள் வரை தங்கியிருந்திருக்க வேண்டும். அப்படியிருக்க அவரால் எப்படி 85 படங்களைப் பார்த்து முடிவெடுத்திருக்க முடியும் என்கிறார்கள்.
இருந்தாலும், பாரதிராஜாவோ நான் அனைத்துப் படங்களையும் பார்த்த பின்புதான் விருதுக்கான அறிவிப்பையே வெளியிட்டோம். இடையில் அவசர வேலையாக சென்னை வரவேண்டியதாக இருந்தது. அதன் பின்னர் மீண்டும் திரும்பி மற்ற படங்களையும் பார்த்து முடித்தேன். அப்படியிருக்க எதற்கு தேவையற்ற சர்ச்சையை கிளப்புகிறார்கள் எனத் தெரியவில்லை என்கிறார்.
பாரதிராஜா தேர்வுக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டபோதே பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மலையாளத் திரையுலகில் பலர் இருக்க, தமிழ்த் திரையுலகில் இருந்து எதற்கு நியமனம் செய்ய வேண்டும் சில முக்கிய மலையாளத் திரையுலகப் பிரபலங்களே எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது வேண்டுமென்றே பாரதிராஜா மீது குற்றம் சுமத்துவதாகவும் சொல்கிறார்கள்.