ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'அட்டகத்தி' நந்திதாவின் கேரியர் கிராப் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. அவர் நடித்த நளனும் நந்தினியும் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அதன் பிறகு அவர் நடிக்கத் தொடங்கிய படங்கள் எல்லாம் குறிப்பிட்ட காலத்தில் வெளியாகி வருகின்றன. தற்போது சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல், பரத் நடிக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசிகாமணி மற்றும் அஞ்சலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் பக்கா கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசிகாமணி படத்திலும் கூட ஏறக்குறைய கிராமத்துப் பெண் வேடம்தான்.
சமீபத்தில் வெளிவந்த முண்டாசுபட்டி படத்திலும் கிராமத்துப்பெண்ணாகவே நடித்திருந்தார் நந்திதா. தொடர்ந்து கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பது நந்திதாவுக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. நந்திதாவுக்கு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் மட்டும்தான் பொருந்தும் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டால் எதிர்காலத்தில் அதுவே பிரச்சனையாகிவிடும் என்பதே நந்திதாவின் பயம். எனவே இனி கொஞ்ச காலத்துக்கு வில்லேஜ் கேரக்டரில் நடிப்பதில்லை என்றும் முழுக்க முழுக்க மாடர்ன் கேரக்டரில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவு செய்திருக்கிறாராம் நந்திதா.
சமீபத்தில் முன்னணி இயக்குநரின் பட வாய்ப்பு அவரை தேடி வந்தது. கதையை கேட்ட பிறகு வில்லேஜ் கேரக்டர் என்பதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம் நந்திதா.