தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து ஒரு பெரிய ரவுண்டே வந்தவர் மஞ்சுவாரியர். குறிப்பாக, மோகன்லால், மம்மூட்டியுடன் நடித்தபோதும் அவர்களுக்கு இணையான வேடத்தில்தான் மஞ்சுவும நடித்தார். அந்த அளவுக்கு அவரது திறமையை மதித்து மலையாள டைரக்டர்கள் வாய்ப்பு கொடுத்தனர்.
அதனால், மலையாள சினிமாவில் நீண்டகாலத்துக்கு மஞ்சுவாரியரின் மார்க்கெட்டை இன்னொரு நடிகையால் வீழ்த்த முடியாது என்ற நிலைதான் இருந்து வந்தது. அந்தநேரத்தில்தான் திலீப்புடன் சில படங்களில் நடித்தபோது காதலில் விழுந்தார் மஞ்சுவாரியர். அதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போது 13 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில், கணவர் திலீப்புடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக தனது பெற்றோருடன் வசித்து வந்த மஞ்சுவாரியர், திலீப்பை விவாகரத்து செய்ய முடிவெடுத்த கையோடு, மீண்டும் நடிப்புக்கோதாவிலும் இறங்கியவர், ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மெகா ஹிட்டாகியுள்ளது.
அதனால் மீண்டும் மஞ்சுவை புக் பண்ண படாதிபதிகள் கிளம்பி விட்டனர். இதற்கிடையே முதல் ரவுண்டில் மலையாள சினிமாவிலேயே முடங்கிப்போன மஞ்சு, இந்த முறை தமிழிலும் கோலோச்ச வேண்டுமென்று சூர்யா நடிக்கும் படமொன்றில் நடிக்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்த கோடம்பாக்கம் வந்திருந்தார். அப்போது அவரது முன்னாள் ரசிகர்களான சில நடிகர்கள் அவரை சந்திக்க நீண்ட க்யூவில் நின்றனர்.
அப்போது, இன்னும் பழைய அழகு குறையாமல் மஞ்சுவாரியர் இளமையாக ஜொலித்ததால், இன்னும அப்படியே இருக்காரே, என்ன இருந்தாலும் கேரள அழகுக்கு இணை எதுவும் இருக்க முடியாது என்று உச் கொட்டத் தொங்கி விட்டனர். அதோடு, மஞ்சுவுக்காக அபிமான டைரக்டர்களிடம் சிபாரிசு கோரவும் தொடங்கி விட்டனர். இதனால் செகண்ட் ரவுண்டில் மஞ்சுவின் கொடி தமிழ்சினிமாவில் பரபரப்பாக பறக்கும் நிலை உருவாகியுள்ளது.