கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
'துப்பாக்கி'யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வந்த படம் ''கத்தி''. இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. இந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 40 நாட்களாக சென்னையில் நடந்து வந்ததோடு, கடைசி நாளன்று பூசணிக்காயும் உடைத்தனர்.
இதையடுத்து, சமீபகாலமாக தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் விருந்து கொடுப்பதை கடைபிடித்து வரும் விஜய், கத்தி படத்தில் பணியாற்றிய அனைத்து நபர்களுக்கும் நேற்று அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்துள்ளார்.
அதுவும், வழக்கம்போல் தனது கையாலே அனைவருக்கும் விருந்து பரிமாறியிருக்கிறார். மேலும் கடைசி பந்தியில் தானும் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். ஆனால், படத்தின் நாயகியான சமந்தா, ஒரு தெலுங்கு படத்தில் சிக்கிக்கொண்டதால் அவரால் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையாம். இருப்பினும், அடுத்து முன்னணி டெக்னீஷியன்களுக்காக நடக்கும் ஸ்டார் ஹோட்டல் விருந்தில் அவசியம் கலந்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம்.