ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சமீபத்தில் "திலீப் குமார் நிஜமும் நிழலும்" என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். 91 வயதாகும் திலீப்குமாரின் அனுபவங்கள் நிறைந்த இந்த புத்தகம் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. திலீப்குமாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராபானுவுடன் சென்று சந்தித்தார். அவருடன் மனம் விட்டு பேசினார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது: திலீப்குமாரையும், அவரது படங்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தேன். அவர் எழுதிய சுயசரிதை நூலில் கையெழுத்து வாங்கினேன். திலீப்குமார் தம்பதிகளின் அன்பும், அவர்களின் வாழ்க்கை முறையும் எங்களை மிகவும் கவர்ந்தது. அவரது சுயசரிதையை விரைவில் படித்து முடிப்பேன். என்று எழுதியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் முஸ்லிம் மதத்திற்கு செல்வதற்கு முன்பு அவரது பெயர் திலீப்குமார் என்பதும். அவரது மனைவி பெயரும், திலீப்குமாரின் மனைவி பெயரும் சாய்ராபானு என்பதும் எதேச்சையாக அமைந்த பொருத்தங்கள். இதனை தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ள ரஹ்மான், இந்த பொருத்தத்திற்காக அவரை சந்திக்கவில்லை என்பதையும் கூறியிருக்கிறார்.