பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த். கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலகி விட்டார். சூதாட்ட வழக்கு நடந்து வருகிறது. என்றாலும் அவர் இப்போது சினிமாவின் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார். எஸ்டர்ஈயர் என்ற மலையாளப்படத்தை அவரது அண்ணன் திப்புசாந்த் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். அதில் ஸ்ரீசாந்த் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து திப்புசாந்த் கூறும்போது: ஸ்ரீசாந்த் இந்திப் படத்தில் நடிக்க போவது உண்மைதான். அது ஒரு குடும்ப கதை. தற்போது அவர் பங்கேற்று வரும் ரியாலிட்டி ஷோ முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்குகிறது. தமிழ் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஸ்ரீசாந்த் ஏற்கவில்லை. அவர் இந்தி படங்களுக்கே முக்கியத்தும் கொடுக்கிறார். அவர் நடிக்கப்போகும் இந்திப் படம் 2015ம் ஆண்டு ரிலீசாகும். என்கிறார் திப்புசாந்த்.