600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பல படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டு செமத்தியாய் சம்பாதித்துக் கொண்டிருந்த சினேகனுக்கு சில வருடங்களுக்கு முன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன் காரணமாக டான்ஸ் க்ளாஸ், ஜிம் என்று நேரத்தை செலவிட ஆரம்பித்தார். அதனால் பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்துபோயின. அமீர் நடித்த யோகி படத்தில் அவரது நண்பராக சிறு வேடத்தில் தலைகாட்டிய சினேகன், அடுத்து உயர்திரு.420 என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். மலேஷியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு ஆசையைக்காட்டி அவரையும் படத்தில் நடிக்க வைத்தார். மலேஷிய பார்ட்டியின் கோடிகள் கரைந்து போனதுதான் மிச்சம். உயர்திரு.420 என்ற அந்தப் படம் இரண்டு நாட்கள் கூட தியேட்டர்களில் இல்லை.
அப்படியும் சினேகனின் ஹீரோ ஆசை அடங்கவில்லை. தனக்கு தெரிந்த பெரும்புள்ளிகள் சிலரை அணுகி, தன்னை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும்படி கேட்டு வந்தார். அதில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். சினேகன் அணுகிய பலரும் படம் எடுக்கும் அளவுக்கு பணம் இல்லை என்ற நழுவிவிட்டனர். பிறகு, தன் நண்பர்கள் சிலரிடம் கதை சொல்லி, அவர்களை படத்தை தயாரிக்க வைத்து தற்போது ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் தொடங்கிய சில நாட்களிலேயே பணப்பிரச்சனை! திட்டமிட்டபடி பட வேலைகளை தொடர முடியவில்லை. எனவே முன்னணி நடிகர்கள் சிலரிடம் பைனான்ஸ் கேட்டிருக்கிறார் சினேகன்.