சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளைக்கண்டாலே கூச்சப்பட்டு விலகிக்கொள்வார் ஜெயம் ரவி. ஆனால், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அசினுடன் நடித்தபோது, ரொம்பவே இயல்பாகி விட்டார். அதுவரை நடிகைகள் அமர்ந்திருக்கும் பக்கமே செல்லாதவர், அந்த படத்தில் நடித்தபோது அசினுடன் மணிக்கணக்கில் கடலை போடத் தொடங்கினார். இப்படி ஆரம்பித்தவர், அதையடுத்து தில்லாலங்கடியில் தமன்னாவுடன் நடித்தபோது அவர் தன்னை கலாய்க்குமபோது பதிலுக்கு இவரும் கலாய்த்தார். அப்படி பேசத் தொடங்கிய ஜெயம் ரவி, இப்போதெல்லாம் நன்றாக பேசக்கூடிய நடிகைகள் தன்னுடன் நடித்தால் ஓய்வு நேரங்களில் படப்பிடிப்பு தளத்தை அரட்டை அரங்கமாக்கி விடுகிறார்.
அந்த வகையில் தற்போது, 'தனி ஒருவன்' படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருபவர், அவர் மீது கொண்ட மரியாதையினால் அடக்கி வாசித்து வருகிறார். ஆனால் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் தன்னுடன் நடித்து வரும் ஹன்சிகாவை தினம் தினம் கலாய்த்து எடுக்கிறாராம் ஜெயம்ரவி. ஏற்கனவே எங்கேயும் காதல் படத்திலேயே இணைந்து நடித்த ஜோடி என்பதால், ஹன்சிகாவும் அவர் என்ன பேசினாலும் அதற்கு அவரும் பதிலடி கொடுக்கிறாராம். இருப்பினும், சமீபகாலமாக அம்மணிகளை கலாய்ப்பதில் ஜெயம்ரவி படு கில்லாடியாகி விட்டதால், அவரது தாக்குதலை ஹன்சிகாவினால் தாக்குப்பிடிக்க முடியாமல், அடிக்கடி கேரவனுக்குள் சென்று தலைமறைவாகிக்கொள்கிறாராம்.