ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மங்காத்தாவில் தொடங்கி அஜீத் நடித்த ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் பல இளவட்ட ஹீரோக்களும் நடித்தனர். தான் ஹீரோ என்றபோதும் அவர்களின் கேரக்டர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்க வைத்தார் அஜீத். அதோடு, ஆரம்பம் படத்தில் தெலுங்கு நடிகர் ராணா அஜீத்தின் நண்பராக நடித்தார். அவருக்கும் அந்த கதையில் முக்கியத்துவம் இருந்தது.
இந்த நிலையில், வீரம் படத்தை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் அஜீத், மீண்டும் ராணாவுக்கும் தனது படத்தில் நல்லதொரு வேடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். அதனால் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களை இயக்கி வரும் சிவா, அஜீத்தைக்கொண்டு தான் இயக்கும் அடுத்த படத்தில் ராணாவுக்கு முக்கிய வேடம் கொடுப்பதோடு, அப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்குகிறாராம்.
மேலும், அந்த படத்தில் முதலில் வித்யாபாலனை அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் சிவா. ஆனால், ஹீரோவுக்கு இணையான தனது கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வித்யாபாலன் இவர் சொன்ன கேரக்டரில் நடிக்க ஒத்துவரவில்லையாம். அதனால் இப்போது சமந்தாவிடம் பேசியுள்ளார்.
அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும் அவரும் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம். ஆக, அஞ்சானில் சூர்யா, கத்தியில் விஜய், பத்து எண்ணறதுக்குள்ள படத்தில் விக்ரமுடன் நடித்துள்ள சமந்தா, அடுத்து அஜீத்துடனும் நடித்து கோடம்பாக்கத்தின் நம்பர்-ஒன் நாற்காலியில் உட்கார ரெடியாகி விட்டார்.