விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பழம்பெரும் நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசன், சாவித்ரியின் மகள் வயிற்று பேரன் அபிநய். ராமானுஜன் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்திருக்கிறார். தாத்தா பாட்டிக்கு கொடுத்த இடத்தை எனக்கும் கொடுங்க என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது: சினிமா குடும்பத்துலேருந்து சினிமாவுக்கு வந்திருக்கேன். தெலுங்கு படத்துல நடிக்க முயற்சி பண்ணினப்போதான் என்னோட ஒரு ஸ்டில் பார்த்துட்டு ஞானராஜசேகரன் சார் கூப்பிட்டாங்க. உங்கிட்ட ராமானுஜர் சாயல் இருக்கு. கண்ணும் மூக்கும் அச்சு அசலா ராமானுஜர் மாதிரியே இருக்கு, நீ இந்தப் படத்துல நடிக்கிற என்றார். அவ்வளவு பெரிய கேரக்டரை என்னால தாங்க முடியுமா சார்னு கேட்டேன். உன்னால முடியும், பிப்டி பிரசண்ட் நீ முயற்சி பண்ணு, மீதி பிப்டி பிரசண்ட நான் பார்த்துக்கிறேன்னு சொன்னார். செலக்ட் ஆனது உறுதியான பிறகுதான் சார் நான் சாவித்திரியோட பேரன்னு அவர்கிட்ட சொன்னேன். அவருக்கு ஆச்சர்யம். அப்போ ரத்தத்துலேயே உனக்கு நடிப்பு இருக்கும் பிரச்னையே இல்லன்னு சொன்னார்.
நடிக்கும்போது எனக்கு கொஞ்சம் மன அழுத்தம் இருந்திச்சு. தாத்தா பாட்டி பெயரைக் காப்பாற்றுணுமேங்ற பயம், சுஹாசினி ஆண்டி, நிழல்கள் ரவி அங்கிள் தைரியம் சொல்லி நடிக்க வச்சாங்க. எங்க குடும்பத்துலேந்து ஸ்ரீஸ்ரீ சித்தி, ரேகா சித்தியெல்லாம் நடிகையானாங்க. எங்கம்மாவுக்கும் நடிகையாகணுன்னு ரொம்ப ஆசை இருந்திச்சு. இந்தப் படத்துல என்னோட அம்மாவா அவுங்க நடிக்கிறதுக்கு டைரக்டர் சாரை கேக்கலாமுன்னு இருந்தேன். அதுக்குள்ள சுஹாசினி மேடத்தை பிக்ஸ் பண்ணிட்டாங்க. அவுங்களும் ஸ்கீரின்ல என்னோட நிஜ அம்மாவா இருந்தாங்க.
தமிழ் ரசிகர்கள் என்னோட தாத்தா பாட்டிய அவுங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சாங்க. அந்த மாதிரி என்னையும் குடும்பத்துல ஒருத்தரா சேர்த்துக்குவாங்கன்னு நினைக்கிறேன். அவுங்களுக்கு மனசுல இடம் கொடுத்த மாதிரி, எனக்கும் சின்ன இடம் கொடுப்பாங்கன்னு நம்புறேன். தாத்தா பாட்டி பெயரை காப்பாத்துற மாதிரி நடந்து சினிமாவுல என்னால என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன் என்றார் அபிநய்.