சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
வெளுத்துகட்டு கதிர், மான் கராத்தே புகழ் வம்சி கிருஷ்ணா இணைந்து நடிக்கிற படம் களவு தொழிற்ச்சாலை. மும்பை மாடல் குஷி ஹீரோயின். இயக்குனர் களஞ்சியம் வில்லன். டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்குகிறார். இது சிலை கடத்தும் சர்வேத கும்பலை பற்றிய கதை.
இதன் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் உள்ள பாழைடந்த கோவில்களில் நடந்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் ஒரு ரகசிய சுரங்கப் பாதைக்குள் நடக்கிறது. தமிழ்நாட்டில் சில முக்கிய கோவில்களை ஒட்டி இத்தகைய சுரங்க பாதைகள் உள்ளன. அங்கு படப்பிடிப்பு நடத்த தொல்பொருள் ஆய்வுத்துறை அனுமதி தராததால் செயற்கையாக பூமிக்கு அடியில் 300 அடிக்கு சுரங்க பாதை அமைத்து படம் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் டி.கிருஷ்ணசாமி கூறியதாவது: கதையின் முக்கிய காட்சிகள் கோவில்களுக்கு உள்ளேயும் ரகசிய சுரங்க பாதையிலும் நடக்கிறது. இதற்காக இந்தியா முழுவதும் 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் அலைந்து தேடினோம் கிடைக்கவில்லை. கிடைத்த இடத்தில் படம்பிடிக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டின் கோவில்களில் உள்ள ரகசிய சுரங்கத்திற்கு சென்று அதன் அமைப்பை படமாக வரைந்து அதை மாடலாக கொண்டு செயற்கையாக 300 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்தோம். 20 நாட்கள் அந்த சுரங்கத்தில் படம்பிடித்தோம். சுரங்கத்தின் முகப்பாக 300 ஆண்டுகள் பழைமையான ஒரு சாதுக்கள் மண்டபத்தை தேடிப்பிடித்து படமாக்கி பயன்படுத்தியிருக்கிறோம்" என்றார்.